Wednesday 25 December 2013

Thanga Meenatchi Interview

சரவணன் மீனாட்சி பார்ட் 2 தொடரின் நாயகி தங்க மீனாட்சிதான் சின்னத்திரையின் க்யூட் கதாநாயகி. பிரிவோம் சந்திப்போம் தொடரில் கறுப்பு மேக் அப் போட்டபோதே களையாக தெரிந்த நாயகி, இளவரசி தொடரில் மகாலட்சுமியாக வந்து அசத்தினார். இடையில் கொஞ்சநாளாய் சீரியலில் ஆளைக் காணோமே என்று தேடினால் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி பார்ட் 2வில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். காதலித்த தினேசை திருமணம் செய்து கொண்டு ஒருமாதம்தான் ஆகிறது ஆனாலும் பிரேக் கூட விடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரை பயணம்,காதல் திருமண வாழ்க்கை இரண்டுமே பேலன்ஸ் ஆக போய்க்கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் தங்க மீனாட்சி.


மீனாட்சியாக நான்

 சரவணன் மீனாட்சி முதல் பகுதியில் மீனாட்சி அமைதியான பெண். ஆனால் பகுதி 2ல் தங்க மீனாட்சி க்யூட் ரவுடி. ஜாலியாக கலகலப்பாக போகிறது. சரவணனை சீண்டுவதும்... செல்லமாக கோபிப்பதும் அந்த கதபாத்திரத்திற்கு பொருத்தமான பெண்ணாக இருக்கிறார்.




பெங்களூர் பெண்

 சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் ஜோதி, இளவரசி தொடரில் மகாலட்சுமி, இப்போது தங்கமீனாட்சி. பெங்களூர் பெண்ணான இவரது இயற்பெயரான ரசிதா என்பதே பெரும்பாலோனோருக்கு மறந்து விட்டது.


காதல் திருமணம் 

பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த தினேஷ்தான் தங்கமீனாட்சியின் காதல் கணவர். தொடரில் நடிக்கும் போதே காதலித்த இந்த ஜோடி கடந்த நவம்பரில்தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கர்நாடகா பெண் தமிழ்நாட்டின் மருமகள் ஆகியுள்ளார்.


சீரியலில் பிஸி 

காதலிக்கும் போது கிடைத்த நேரம் கூட இப்போது இந்த ஜோடிக்கு கிடைக்க வில்லையாம். தங்கமீனாட்சி தமிழ், தெலுங்கு சீரியல்களில் பிஸி என்றால், கணவர் தினேஷ் விஜய் டிவியின் புதுக்கவிதை தொடரின் ஹீரோ. இருவருமே பிஸியான நடிகையாக மாறிவிட்டனர்.


நேரம் போதவில்லை 

பிறந்த வீடு பெங்களூர், புகுந்த வீடு சென்னை, தெலுங்கு சூட்டிங்கிற்காக ஹைதராபாத் என பறந்து கொண்டே இருப்பதால் தங்கமீனாட்சிக்கு நேரம் போதவில்லையாம்.


சினிமாவில் கணவர்

 காதல் கணவர் திணேஷ், திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தில் நடித்திருக்கிறாராம். இருவருமே ஒரே துறை என்பதால் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார்.